யாழ்.
மறை
மாவட்ட
திருஅவையின்
மூத்த
குருக்களில்
ஒருவரான
அருட்திரு
G. E.
மேரி
யோசப்
அடிகளார்
தனது
85வது
அகவையில்
19.02.2021
இன்று
வெள்ளிக்கிழமை
இறைவனடி
சேர்ந்துள்ளார்.
1962ம்
ஆண்டில்
யாழ்.
மறைமாவட்ட
குருவாக
ஆயர்
எமிலியானுஸ்
ஆண்டகை
அவர்களினால்
திருநிலைப்படுத்தப்பட்டு
மறைமாவட்டத்தின்
நல்லூர்,
ஊர்காவற்துறை,
பேராலயம்,
நாவந்துறை,
மானிப்பாய்,
பண்டியந்தாள்வு
ஆகிய
பங்கு
தளங்களில்
உதவிப்பங்குத்தந்தையாகவும்
பங்குதந்தையாகவும்
பணியாற்றியுள்ளாதுடன்
புனித
மடுத்தினார்
சிறிய
குருமட
அதிபராகவும்,
பாதுகாவலன்
பத்திரிகையின்
பிரதம
ஆசிரியராவும்,
அச்சக
முகாமையாளராகவும்
புனித
சவேரியார்
குருமடத்தின்
உப
அதிபராகவும்,
உருவாக்குனராகவும்,
பல
நிலைகளிலும்
சிறப்பான
பணியாற்றியுள்ளார்.
அன்னாரின்
பூதவுடல்
மக்களின்
அஞ்சலிக்காக
யாழ்.
மறைமாவட்ட
ஆயர்
இல்ல
சிற்றாலயத்தில்
நாளை
20.02.2021
சனிக்கிழமை
காலை
9.00
மணிக்கு
வைக்கப்படும்.
தொடர்ந்து
22.02.2021
திங்கட்கிழமை
மதியம்
3.30
மணிக்கு
புனித
மரியன்னை
பேராலயத்தில்
அடக்கச்
சடங்கு
திருப்பலி
ஒப்புக்கொடுக்கப்படும்.
இறைவனடி
சேர்ந்த
அருட்தந்தையின்
பணிவாழ்விற்காக
இறைவனுக்கு
நன்றி
கூறி
அவரின்
ஆன்ம
இளைப்பாற்றிக்காக
மன்றாடுவோம்.
இறைவனடி
சேர்ந்த
முன்னாள்
பாதுகாவலன்
பத்திரிகையின்
பிரதம
ஆசிரியரும்
அச்சகத்தின்
முகாமையாளருமான
அருட்திரு
மேரி
யோசப்
அடிகளாரின்
பூதவுடலுக்கு
ஆயர்
இல்ல
சிற்றாலயத்தில்
இறுதி
அஞ்சலி
செலுத்தும்
பாதுகாவலன்
பத்திரிக்கை
குழுமம்.
பாதுகாவலன் பத்திரிகையின் ஆலோசகர்
வட்டக் கூட்டம் 9.1.2021சனிக்கிழமை இன்று பாதுகாவலன் மண்டபத்தில்
பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அருட்திரு S.A.றொஷான் அவர்களின்
தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதுகாவலன்பத்திரிகையின்
வளர்ச்சியில் அக்கறை கொண்ட குருக்கள் துறவிகள் பொதுநிலையினரென 30
பேர் பங்கெடுத்தனர். புதிய ஆண்டில் பாதுகாவலன் பத்திரிகையின்
வளர்ச்சியை நோக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட வோண்டிய பணிகள் பற்றிய
கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. பத்திரிகையின் உள்ளடக்கம்
வடிவமைப்பு விநியோகம் போன்ற விடயங்கள் இங்கு
கலந்துரையாடப்பட்டன.புதிய ஆண்டில் பாதுகாவலன் பத்திரிகையின்
வளர்ச்சியில் எப்படியான செயற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனும்
தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட.ன.