"இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே:
உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்கு கற்பிப்பவரும்
செல்ல வேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே" ஏசாயா
48:-17
யாழ். மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை அருள்நேசன்
அவர்கள் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை இன்று இறைவனடி
சேர்ந்தார்.இவர் நாரந்தனையை பிறப்பிடமாக கொண்டிருந்தவரும் ,
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.
அருட்தந்தை அவர்கள் 1994 மார்ச் மாதம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு
யாழ். புனித மரியன்னை பேராலயம் மற்றும் குருநகர் பங்கின்
உதவிப்பங்குத்தந்தையாகவும், உரும்பிராய் பங்கில் பதில்
பங்குத்தந்தையாகவும், மிருசுவில், நெடுந்தீவு, செம்பியன்பற்று,
ஆணைக்கோட்டை, ஊறணி, ஒட்டகப்புலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில்
பங்குத்தந்தையாகவும், அத்துடன் கனடா ரொரன்ரோ தமிழ் கத்தோலிக்க ஆன்மீக
பணியக இயக்குனராகவும், கனடா கத்தரீன் ஆலய பங்குத்தந்தையாகவும்
பணியாற்றியுள்ளார்.
அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அருட்தந்தையின் பணிவாழ்வுக்காக இறைவனுக்கு
நன்றிகூறி அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.