Tamil Font

Home
Messages
Songs
Vanpura
Gallery
Ministries
Links
Daily reading
Contact us
Tamil Parish
Mississauga
Montreal
Waterloo
Down Town
Scarbrough
Diocese
Holy Bible
Video
Audio Bible
Bible Download
Real Player
Paathukavalan
Fr.Paul Robin
 
 
 

 

 

   Tamil Reding  English reading  Guest Book  Diocese

 jkpo; Ntjhfkj;ij download nra;gth;fs;   vk;NkhL njhlh;G nfhs;sTk; tamilgoodnews@yahoo.com            njhiyNgrpKyk; ew;nra;jpj;jpahdk; (416) 628 5945 cq;fs; nrg tpz;zg;q;fis ,q;Nf gjpTnra;aTk; (416) 646 2044

 

வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி

 
மாதகல் புனித லூர்துமாதா ஆலய வருடாந்த திருவிழா

 

   மாதகல் புனித லூர்துமாதா ஆலய வருடாந்த திருவிழா அண்மையில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயம் மாதகல் கடற்கரைப் பகுதியில் உள்ளது. கடந்த பல வருடங்களாக இந்த ஆலயத்தில் பூசைகள் இடம்பெறாத நிலைமை காணப்பட்டது. இவ்வருட உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்க்ணக்கான மாதாவின் அடியார்கள் ஆலயத்திற்கு முதல் நாளே வருகை தந்து தங்கியிருந்து, திருப்பலிப் பூசையிலும் திருச்சுரூப பவனியிலும் கலந்து கொண்டனர். ஆலயச் சுற்றாடலில் பல மணி நேரம் குதூகலமாகக் கழித்தனர்.

 

    

fr;rjPT Gdpj me;NjhdpahH jpUtpoh.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்பரப்பில் அமைந்துள்ள கச்சத்தீவின் புனித அந்தோனியார் தேவாலய திருவிழா கடந்த பல ஆண்டுகளாக, பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக சர்ச்சைக்குள்ளாகி வந்தது.

குறிப்பாக இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான ஆயுத மோதல் காரணமாக, கடந்த ஆண்டுகளில் கச்சத்தீவுக்கு செல்ல தமிழக மீனவர்கள் முயன்றபோது, அதற்கு இந்திய கடற்படையும் இலங்கை அரசும் உரிய அனுமதிகள் அளிக்காமல் தடுப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. சில ஆண்டுகளில் இந்த திருவிழா முற்றாக நிறுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

விடுதலைப்புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் தோற்கடித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த பிறகு நடக்கும் முதல் திருவிழா என்பதால், கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா குறித்து தமிழ்நாட்டின் தென் பகுதியிலும், இலங்கையின் வடக்கிலும் மேலதிக ஆர்வம் காணப்பட்டது.

இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கச்சத்தீவு சென்று சுமுகமான சூழ்நிலையில் திருவிழா நடத்தியதாக கச்சத்தீவு சென்றிருந்த ஹிந்து நாளிதழின் செய்தியாளர் ஜெய்சங்கர் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை யாழ் மறை மாவட்டம் நல்ல முறையில் செய்திருந்ததாகவும், இந்திய இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.

Gp.gp.rp jkpNohir-28.02.2010.

 

கச்சத்தீவு விழா பண்ட பரிமாற்றம் : தமிழர்களுக்கு ஏமாற்றம்

ராமநாதபுரம் :கச்சத்தீவு திருவிழாவில் பண்ட பரிமாற்றம் செய்ய சென்ற தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.கச்சத்தீவு விழா நடைபெறும் காலங்களில், இலங்கையிலிருந்து வருபவர்களிடம், தமிழகத்திலிருந்து செல்பவர்கள் பண்ட பரிமாற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 

இங்கிருந்து செல்பவர்கள் கைலி, சுடிதார், ரெடிமேட் சட்டைகள், பேன்சி,அழுகு சாதன பொருட்கள்,வளையல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இலங்கையர்களிடம் கொடுத்து, அதற்கு பதிலாக சோப், பால் பவுடர், தேங்காய் எண்ணெய், டீ தூள் உள்ளிட்ட பொருட்களை பெற்று வந்தனர்.இடையில் இலங்கையில் ஏற்பட்ட போரால் கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இலங்கை பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் கச்சத்தீவு விழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்தது. அதன்படி தமிழர்களும் பொருட்களை சேகரிக்கத் துவங்கினர். நீண்ட இடைவெளிக்கு பின் போவதால் பொருட்களுக்கு நல்ல கிராக்கி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், விலை உயர்ந்த கைலிகள், பேன்சி, அழகு சாதன பொருட்கள் என பலவகையான பொருட்களை சேகரித்து சென்றனர்.

 

ராமேஸ்வரம் தீவு பகுதிகளிலிருந்து 2,910பேர் சென்றனர். ஆனால் இலங்கையிலிருந்து 800 பேர் மட்டுமே வந்துள்ளனர். இதிலும் இலங்கையிலிருந்து வந்தவர்களில் சிலர் மட்டுமே பண்ட பரிமாற்றத்திற்கான பொருட்களை கொண்டு வந்துள்ளனர். இலங்கையர் ஒரு நபரிடம் ஐந்துக்கும் அதிகமானோர் நாடவே, இலங்கையர்கள் தாங்கள் கொண்டு வந்த சோப் மூன்றை (ரூ.60மதிப்பு)கொடுத்து 300 ரூபாய் மதிப்புள்ள கைலியை கேட்டுள்ளனர். தமிழர்கள் பொருட்களுக்கு விலை குறைவாகவும், இலங்கை பொருட்களுக்கு விலை அதிகமாகவும் கூறியதால், பண்ட பரிமாற்றம் செய்ய நினைத்த தமிழர்கள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் சிலர் ,இலங்கை பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக மதிப்புடைய பொருட்களை கொடுத்து சோப்பு, பால் பவுடர்களை வாங்கிவந்தனர்.

jpdkyH 03.02.2010.

 

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010, 09:21.33 AM GMT +05:30 ]
 
இலங்கையில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த ஆண்டு கச்சதீவு திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், கச்சதீவு திருவிழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கச்சதீவில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, நாளை 28ஆம் திகதி காலை திருப்பலி, தேர்பவனி நிகழ்வுகளுடன் நிறைவு பெறும்.
கச்சதீவில் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க இராமேஸ்வரம் சுற்றுப்பகுதி தீவு மக்கள் கூட்டம், கூட்டமாக வி‌சைப்படகு மூலம் புறப்பட்டு சென்றவண்ணம் உள்ளனர்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரினால், 1978 ல் நிறுத்தப்பட்ட, கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா, 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், 2001 ல் நடந்தது. தொடர்ந்து இலங்கை அரசின் ஒத்துழைப்புடன், 2005 வரை நடந்த, அந்தோனியார் திருவிழாவில் மன்னார், நெடுந்தீவு பகுதியிலிருந்தும் இராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

2006 ல் இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே, யுத்தம் உக்கிரமாக நடந்ததால் பாதுகாப்பு கருதி, கச்சதீவு திருவிழாவை இலங்கை அரசு நிறுத்தியது.

தற்போது, இலங்கையில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த ஆண்டு கச்சதீவு திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், கச்சதீவு திருவிழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கச்சதீவில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, நாளை 28ஆம் திகதி காலை திருப்பலி, தேர்பவனி நிகழ்வுகளுடன் நிறைவு பெறும்.

விழாவில் தமிழகத்திலிருந்தும், பக்தர்கள் பங்கேற்க ஆயர் பேரருட்திரு தோமஸ் சௌந்தரநாயகம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு அருட்திரு. ஞானப்பிரகாசம், சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு சூசை மாணிக்கம், இராமேஸ்வரம் வேர்கோட்டு புனித சூசையப்பர் ஆலய பங்குத் தந்தை அருட்திரு மைக்கேல் ராஜ் ஆகியோருக்கு இது குறித்து ஆயர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று காலை இராமேஸ்வரம் ஒட்டிய பாம்பன், மண்டபம், தங்கச்சி மடம் மற்றும் அருகில் உள்ள தீவுப்பகுதி மக்கள் இராமேஸ்வரம் வந்தனர். நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் குடும்பத்தோடு ஆர்வமாக புறப்பட்டு சென்றவண்ணம் உள்ளனர்.

இந்திய, இலங்கை கடற்படையினர் பக்தர்களிடம் ‌சோதனை நடத்துகின்றனர். அடையாள அட்டை முக்கியமாக பரிசோதிக்கப்படுகிறது. 2 நாட்கள் விழாவை முடித்து நாளை மறுநாள் பக்தர்கள் இராமேஸ்வரம் திரும்புவர். விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 Home    1  2  3  4  5  6  7  Copyright 2000 Catholic New Life Ministry. All rights reserved.Paathukavalan  Frpaulrobinson  Montrealtamilgoodnews