|

ஈழத்தின் யாழ்.மண்ணில் உறையும்
பாஷையூர்
புனித அந்தோனியார் ஆலயத்
திருவிழா,
கடந்த ஜூன்
1
ஆம் திகதி செவ்வாய்கிழமை
இடம்பெற்ற
கொடியேற்ற நிகழ்வுகளுடன்
ஆரம்பமாகின.
நேற்று
13
ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை,
விசேட திருப்பலியோடு
திருச்சுருப பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின்
160
ஆவது ஆண்டு சிறப்புத்
திருவிழாவாக கொண்டாடப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிகழ்வில் காலை
5.15
மணிக்கு முதலாவது திருப்பலி
ஒப்புக் கொடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து காலை
6.30
மணிக்கு இடம்பெற்ற திருவிழாத்
திருப்பலியை யாழ். ஆண்டகை
பேரருட்திரு தோமஸ் செளந்தரநாயகம் அவர்கள்
தலைமை தாங்கி
ஒப்புக் கொடுத்தார்.
மாலை
4.30
மணிக்குத் திருச்சுரூப பவனி
இடம்பெற்றது.
காலை
6.30
மணிக்கு இடம்பெற்ற திருவிழாத்
திருப்பலியின் சிறப்பு அஞ்சல்,
அவுஸ்திரேலியத் தமிழ்
ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித்
தயாரிப்பாளர்கள் சோனா
பிறின்ஸ்,
பிறின்ஸ் இம்மானுவேல்
ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்டது.
இந்த
நிகழ்வின் நேரடி வர்ணனையை
,
யாழிலிலிருந்து,
யாழ். திருமறைக்கலாமன்றத்தின்
அண்ணாவியார் ஜெசிமன்
சிங்கராயர்,
தாசீரியரின் தொழில்நுட்ப
உதவியோடு
வழங்கியிருந்தார்.
|