|
சிலுவையில் மறைந்தார் சித்தமெல்லாம்
நிறைந்தார்
.

உலகமெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள்
இயேசுவின் சிலுவை மரணத்தை புனித
வெள்ளியாக
'குட்
பிரைடே'
என அனுசரித்து வருகின்றனர். இயேசுவின் பிறப்பு முதல்
உயிர்த்தெழுதல் வரை தெளிவாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே
பைபிளில்
விளக்கப்பட்டுள்ளது. கடவுளின் செயலை இன்றுவரை எந்த
மனிதனாலும் மாற்றி அமைக்க
முடியாது என்பதே உண்மை. தனது சாயலால் முதல் மனிதன் ஆதாமை
படைத்தார். கீழ்படியாமை
மூலம் பலவித பாவங்களுக்கு ஆளான மனு குலத்தை மீண்டும் மீட்க
தன்னையே பலியாக
ஒப்புக்கொடுக்க திட்டம் கொண்டார். ஆதி முதல் பாவத்திற்கு
நிவாரண பலியாக விலங்கு,
பறவைகளின் ரத்தமே தேவைப்பட்டது. ஆனாலும் பாவம் போக்க
வழியில்லாததால்,
கடவுளே
தம்மையே சிலுவை மரணம் மூலம் பாவ நிவாரணப்
பலியானார்.ஆதாமிலிருந்து நான்காயிரம்
ஆண்டுகளுக்கு பின்பு கி.பி. முதலாமாண்டில் இயேசு பிறந்து,
கி.பி.34ல்
தனது
முப்பத்து மூன்றரை வயதில் சிலுவை மரணத்தின் மூலம் ரத்தத்தை
சிந்த முடிவெடுத்தார்.
தனது
30வது
வயதில்
12
சீடர்களுடன் கடவுளின் ராஜ்யத்தை பற்றிய செய்தியையும்,
இந்த
உலகத்துக்கு வரும் முடிவையும் குறித்து சகல பட்டணங்களுக்
கும் சென்று அறிவித்தார்.
அவர் செய்த அற்புதங்களை,
பிரசங்கங்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகள் மீது யூத மத
குருக்களும்,
ஆசாரியர்களும் பொறாமையும் கோபமும் கொண்டனர்.நாளுக்கு நாள்
ஜெருசலேமிலும்,
கலிலேயா,
சமாரியா,
யூதேயா முழுவதிலும் மக்கள் மத்தியில் அவருக்கு
செல்வாக்கு பரவியதால்,
அவரை நெருங்கவோ,
தண்டிக்கவோ முடியவில்லை.
எனவே இயேசுவின்
12
சீடர்களுள் ஒருவனான யூதாசை பயன்படுத்தி,
ரகசியமாக அவரை பிடிக்க வகை தேடினார்கள்.
அவர்களது வலையில் யூதாஸ் பண ஆசைக்காக விழுந்தான். ஒலிவமலை
அருகே கெத்சமனே
தோட்டத்தில் இயேசு இருந்த போது ரோம போர் சேவகர்களுடன்
வந்து இயேசுவை முத்தமிட்டு
காட்டிக் கொடுத்தான்.இயேசுவை மட்டும் பிடித்து சென்ற
வீரர்கள் ரோமப் பேரரசின்
தேசாதிபதி,
ஆசாரியர்கள் முன்பு அவரை நிறுத்தி,
பொய்க்குற்றம் சுமத்தி,
இரவு
முழுவதும் அடித்து துன்புறுத்தினார்கள். மறுநாள்
காலையிலும் தொடர் சித்ரவதை
செய்தனர். இறுதியில் சொந்த ஜனங்களும்,
மத குருக்களும் இயேசுவை சிலுவையில் அறைந்து
கொல்ல வேண்டும் என தேசாதிபதி பிலாத்துவிடம்
வற்புறுத்தினர். பிலாத்து விடுதலை செய்ய
மனதிருந்தாலும் மத குருமார்களின் கட்டாயத்தின் பேரில்
இயேசுவை அவர்களிடம்
ஒப்படைத்ததும்,
சிலுவையில் இயேசுவுடன்,
இரு கள்ளர்களையும் அறைந்தனர்.
சிலுவையில்
கூறிய ஏழு வார்த்தைகள் *''கடவுளே,
இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று
அறியாதிருக்கிறார்கள்''.*தன்னிடம்
அன்பு செலுத்திய கள்ளனிடம்,
''நீ
இன்றைக்கும்
என்னுடன் பரதீசிலிருப்பாய்,''.*தனது
தாயை நோக்கி,
''ஸ்திரீயே!
அதோ உன் மகன்''.*
அருகிலுள்ள சீடரை நோக்கி,
''அதோ,
உன் தாய்,''.*
என் தேவனே,
என் தேவனே ஏன் என்னை
கைவிட்டீர்,''.*
பைபிள் வார்த்தை நிறைவேறத்தக்கதாக
'தாகமாயிருக்கிறேன்'
என்று கூறி,
'முடிந்தது'
என்றார்.*
''பிதாவே,
உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்,''
என்று மகா சத்தமாய் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.உலகில்
பிறக்கும் மனிதன் வாழவேண்டும்
என்று ஆசைப்படுகிறான். ஆனால்,
இயேசு மட்டும் மரிப்பதற்கென்றே பிறந்தார்.
பிறந்தால்தானே மரிக்க முடியும். ரத்தம் சிந்தி மரித்தால்
தானே மனு குலப்பாவத்தை
மீட்க முடியும். பிசாசின் கிரியைகளை அழிக்கமுடியும் என்ற
திட்டத்துடன் பூமியில்
இறங்கி வந்து,
மனிதரோடு,
மனிதராக,
சரித்திர நாயகராக சாதித்து காட்டினார். இன்றும்,
நானே சத்தியம்,
வழி,
ஜீவன் என்று வாழ்ந்து வருகிறார்
jpdkyH
–
26.03.10.
|